ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
டாய்லெட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கத்தில் சன் சிறையா என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் சுஷாந்த் சிங் ராஜ்புட் முக்கிய ரோலில் நடிக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள கொள்ளையர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளார் பூமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், படத்திற்கான ஆயத்த பணிகள் சிறப்பாக செல்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அருமையான கதை, படத்தில் அருமையான நடிகர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். அதேசமயம் கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன் என்கிறார் பூமி.