‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'தீபிகா தலைக்கு, 10 கோடி ரூபாய் தருவோம். தீபிகாவை உயிருடன் எரித்தால், ஒரு கோடி ரூபாய் தருவோம். தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என, தனக்கு எதிராக, பகிரங்கமாக, தினமும் மிரட்டல் விடுக்கப்படுவதை பார்த்து, உண்மையிலேயே மிரண்டு போயிருக்கிறார், தீபிகா.
சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தில், அவர் நடித்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, சித்துார் கோட்டை ராணி, பத்மினியாக, பத்மாவதி படத்தில் நடித்துள்ளார், தீபிகா. இதில், ராணி பத்மினியை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. துவக்கத்தில், இதை பொருட்படுத்தாமல் இருந்த தீபிகா, இப்போது, பீதியில் உறைந்து போயுள்ளார்.
'நாங்கள் குல தெய்வமாக வழிபடும் பத்மினியை பற்றி தரக்குறைவாக விமர்சித்தால், சும்மா விட்டு விடுவோமா' என, ராஜபுத்ர சமூகத்தினர் விடும் மிரட்டல்களால், வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி முடங்கி கிடக்கிறார், தீபிகா.