ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சமீபத்தில் வெளியான அக்ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா ரூ.100 கோடி வசூலை எட்டி, வெற்றி படமாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டனில் இருந்து ஸ்கைப் மூலம் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அக்ஷய் குமார், சமூக ஹீரோ என்ற முத்திரை தனக்கு வேண்டாம் எனவும், அதற்காக சமூக நலன் தொடர்பான படங்களில் நடிக்கவில்லை எனவும் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு அந்த படம் பிடித்திருந்தால், அதில் நடிப்பேன். ரோபட் 2.0 வில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். அதே போன்று கோல்ட் என்ற விளையாட்ட சார்ந்த படத்தில் நடித்துள்ளேன். அவைகள் முற்றிலும் வேறுபட்டவை.
நான் சமூக நலம் சார்ந்த படங்களில் மட்டும் நடிக்கவில்லை. அதனால் தயவு செய்து இது போன்ற முத்திரைகளை என் மீது குத்தாதீர்கள் என்றார். அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் ரோபட் 2.0 படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதி ரிலீசாக உள்ளது.