‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம், சிங்கம்-2 படங்கள் ஹிந்தியிலும் உருவானது. சூர்யா ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க ரோகித் ஷெட்டி இயக்கினார். இந்நிலையில் இப்போது சிங்கம்-3 படம் ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. ஆனால் அஜய்க்கு பதிலாக சன்னி தியோல் நடிக்கிறார், ரோகித்திற்கு பதிலாக ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் விரைவில் சிங்கம்-3 படத்தை இயக்குவேன் என இயக்குநர் ரோகித் ஷெட்டி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் கூறியிருப்பதாவது... "ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அது நடக்கும். சிங்கம் படத்திற்கு நிறைய ரசிகர்கள் உண்டு, அதற்கு என்று ஒரு தனி மரியாதையும் உண்டு. சிங்கம்-3 தேவை ஏற்பட்டால் நிச்சயம் சிங்கம்-3 படத்தை உருவாக்குவேன். ரசிகர்களை மகிழ்விக்கவே படங்கள் இயக்குகிறோம், ஆகையால் இதுபோன்ற படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவேன். ஒருவேளை ரசிகர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிறுத்திவிடுவேன்" என்று கூறியுள்ளார்.
ரோகித்தின் இந்த அறிவிப்பால் பாலிவுட்டில் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. யார், சிங்கம் 3 படத்தை இயக்கபோகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.