‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்திய சினிமாவில் முதன்முறையாக வசூலில் நூறு கோடி கிளப்பை உருவாக்கியவர்கள் பாலிவுட்டின் சக்கரவர்த்திகளாக விளங்கும் மூன்று கான் நடிகர்கள் தான். இவர்கள் மூவருக்கும் கடுமையான போட்டி இருந்தாலும், தங்களுக்குள்ளேயே மாறி மாறி இந்த வசூல் விஷயத்தில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்து வந்தார்களே தவிர வேறு யாரையும் அருகில் நெருங்கவிடவில்லை.. ஆனால் பாகுபலி படத்தின் வசூல் சாதனை இவர்களது ஈகோவுக்கு சரியான சம்மட்டி அடி கொடுத்தது.
சில மாதங்களுக்கு முன் வெளியான 'பாகுபலி-2' படத்தின் வசூல் பாலிவுட்காரர்களை மிரள வைத்தது.. இப்படிப்பட்ட படம் ஒன்றை எப்படி எடுத்திருக்கிறார்கள் என ஆவலோடு பார்ப்பது தானே முறையாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஷாருக், சல்மான், ஆமீர் என மூன்று கான் நடிகர்களுமே சொல்லி வைத்தாற்போல பாகுபலி-2வை பாராட்டுவதோடு நின்றுவிட்டார்கள். ஒருவர் கூட இந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்க்க முன்வரவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சமீபத்தில் பாகுபலி-2 பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஆமீர்கான், “பாகுபலி-2'வின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தவிர எங்களது பாலிவுட் சினிமாவின் சாத்தியம் என்ன என்பதையும் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது. எல்லா மொழிகளிலும் தடைகளை உடைத்திருக்கிறது.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் இந்தப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என கூறியுள்ளார். ஷாருக்கானும் சல்மான் காணும் இதேபோல 'பாகுபலி-2' படத்தை பாராட்டினாலும் அவர்களும் இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.