போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மும்பையை சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை காஜல் அகர்வால் பாலிவுட்டை விட தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கில் தான் பிரபலமாக திகழ்ந்தார். இருந்தாலும் பாலிவுட்டில் அவ்வப்போது வாய்ப்பு வந்தால் நடிப்பார். கடந்தாண்டு இவரது நடிப்பில் டூ லப்சான் கி கஹானி என்ற படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்தார் காஜல். இந்தப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் அதன்பின் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு வரவில்லை.
இந்நிலையில் இப்போது மீண்டும் காஜலுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தர்மேந்திரா தயாரிப்பில் யமலா பகலா தீவான படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது. இதில் காஜல் அகர்வாலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். அவர் பாபி தியோலுக்கு ஜோடியாக, மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். வழக்கம் போல் சன்னி தியோல், தர்மேந்திராவும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது, 2018-ல் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.