ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சமீபகாலமாக அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான அநேக படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளன. ஏர்லிப்ட், ருஸ்டம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்துள்ள அக்ஷ்ய், இப்போது டாய்லட், பேடுமேன் போன்ற வித்தியாசமான சமூகம் சார்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷ்ய், அடுத்தப்படியாக பொறியாளர் ஜேஎஸ் கில் வேடத்தில் நடிக்க இருக்கிறார். யார் இந்த கில் என்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஸ்பேக்.... மேற்கு வங்க மாநிலம் ராணி கஞ்ச் ஊரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு 1989-ம் ஆண்டு பெய்த கடும் மழையால் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் பணியாற்றிய 64 தொழிலாளர்கள் உயிரோடு மாட்டிக்கொண்டனர். இவர்கள் அனைவரையும் பொறியாளர் ஜேஎஸ்.கில் தன் திறமையால் உயிரோடு மீட்டெடுத்தார். இந்த சம்பவம் இப்போது படமாக உருவாக உள்ளது. இதில் கில் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க உள்ளார்.
இப்படியொரு கதையை யார் இயக்க போகிறார்கள், யார் தயாரிக்க போகிறார்கள் போன்ற தகவல்கள் எல்லாம் வெளியாகவில்லை.