போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர் படங்களின் வரிசையில் இப்போது அதன் மூன்றாம் பாகம் சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர்-3 என்ற பெயரில் உருவாக உள்ளது. முதல்பாகத்தில் ரன்தீப் ஹூடாவும், இரண்டாம் பாகத்தில் இர்பான் கானும் கேங்ஸ்டராக நடித்த நிலையில், இப்போது மூன்றாம் பாகத்தில் நடிகர் சஞ்சய் தத் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ராகுல் மித்ரா கூறுகையில், "இந்த ரோலுக்கு சஞ்சய் பக்காவாக பொருந்துவார். படத்தின் கதையே அவரை சுற்றி தான் நகரும். படத்தில் நிறைய புதுமுகங்களை இணைக்க உள்ளோம். அதில் சில பெரிய நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்" என்றார்.
சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர்-3 படத்தை திக்மான்சு துலியா இயக்க, ஜிம்மி ஷெர்கில் மற்றும் மகி கில் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.