இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகை கங்கனா ரணாவத். சிம்ரன் பட கதையை தனதாக்கி சொந்தம் கொண்டாடுகிறார் என்று கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி குற்றம் சாட்டி வரும் வேளையில், அடுத்தப்படியாக பிரபல இயக்குநர் கேத்தன் மேத்தா, கங்கனா மீது கதை திருட்டு புகார் கூறியுள்ளார்.
கங்கனாவும், கேத்தன் மேத்தா இணைந்து ராணி லக்ஷ்மி பாய் படத்தில் பணியாற்ற இருந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்திலிருந்து விலகிவிட்டார் கங்கனா. இந்நிலையில் கங்கனா, தற்போது கிரிஷ் இயக்கத்தில் மணிகர்னிகா என்ற படத்தில் ராணி லட்சுமி பாய் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் வாரணாசியில் துவங்கியது. இந்தச்சூழலில் கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இயக்குநர் கேத்தன் மேத்தா.
இதுகுறித்து கேத்தன் மேத்தா கூறியிருப்பதாவது... "உண்மை தான், கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். எனது படத்தையே மொத்தமாக கடத்தி கொண்டு போய்விட்டார். ராணி லட்சுமி பாய் கதையை படமாக்க வேண்டும் என்பது எனது 10 ஆண்டு கனவு. இதற்காக ஏகப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு இந்த கதையை தயார் செய்தேன். அப்படி நான் தயார் செய்த ஒட்டுமொத்த கதையையும் மொத்தமாக கங்கனா எடுத்து கொண்டு போய்விட்டார்" என்கிறார்.