பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவரது தந்தை சலீம் கானுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சுசிலா சராக். முதல்மனைவிக்கு பிறந்தவர்கள் தான் சல்மான், அர்பாஸ் உள்ளிட்ட நான்கு பிள்ளைகள். இரண்டாவது மனைவி நடிகை ஹெலன். பர்மாவிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டவர். தன் குடும்பத்தை காப்பாற்ற சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். பல்வேறு படங்களில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இவரை காதலித்து சலீம் கான் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை கிடையாது. அர்பிதா கானை தத்தெடுத்து வளர்த்தார்.
இந்நிலையில், தன் சித்தி ஹெலனின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார் சல்மான் கான். அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், சினிமாவில் எப்படி முன்னணி நடிகையாக உயர்ந்து பிரபலமானார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற இருக்கின்றன. படத்திற்கான கதையை சல்மானின் தந்தை சலீம் கானே எழுத உள்ளார். இயக்குநர் முடிவாகவில்லை, சல்மான் தயாரிக்க உள்ளார். கதைப்பணி முடிந்ததும் இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட மற்ற தேர்வுகள் நடைபெற இருக்கிறது.