‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு பிராந்திர மொழி படங்களை தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது, நளினி என்ற பெங்காலி - மராத்தி மொழிகள் கலந்த படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம். இப்படம் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அன்னபூர்ணா இடையேயான காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. 1878 ம் ஆண்டுகளில் தாகூர் 17 வயது இளைஞராக மும்பையில் டாக்டர்.அட்மாராம் பதுராங்குடன் வசிப்பது போல் கதை துவங்குகிறது. அட்மாராமின் 20 வயது மகள் அன்னபூர்ணா. இவருக்கும் தாகூருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
தாகூரின் வாழ்க்கை படத்தை பிரியங்கா தயாரிக்க உள்ளதை அவரது தாயார் உறுதிப்படுத்தி உள்ளார். பிரியங்காவின் தாயார் மது சோப்ரா இத குறித்து கூறுகையில், நல்ல கதைகள் ரசிகர்களிடம் போய் சேர வேண்டும் என பிரியங்கா விரும்புகிறார். நளினி படம் உணர்வுப்பூர்வமான அதே சமயம் பொழுதுபோக்கு கதை. இப்படத்தில் நாங்களும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். நளினி படம் இந்தியிலும் டப் செய்யப்பட உள்ளது.