கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் தனுஜா. இவர் தான் நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷாவின் தாயார் ஆவார். மாஜி நடிகைகள் பலர் சுயசரிதை எழுதுவதில் ஆவலாய் உள்ளனர். சமீபத்தில் கூட நடிகை ஆஷா பரேஷின் சுயசரிதை வெளியானது. மும்பையில் சல்மான் கானும், டில்லியில் அமீர்கானும் இவரது சுயசரிதையை வெளியிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தனுஜாவிடம் உங்களுக்கு சுயசரிதை மீது ஆர்வம் உள்ளதா என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... "சுயசரிதை மீது எனக்கு நம்பிக்கையில்லை. உயிரோடு இருக்கும் போதே எதற்காக சுயசரிதை வெளியிட வேண்டும். அதற்காக மற்றவர் எழுதுவதை நான் குறை கூறவில்லை, அது அவர்களின் விருப்பம். என்னை பொறுத்தமட்டில் எனக்கு இதில் ஆர்வம் கிடையாது. நான் நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளேன், என்னைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். அப்படியே யாராவது என சுயசரிதையை எழுத விரும்பினால் நான் இறந்த பிறகு எழுதட்டும். நான் உயிரோடு இருக்கும் வரை என் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் சுயசரிதையாக வெளியிட விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.