போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
தேசிய விருது அறிவிப்பு தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இந்தாண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் ருஸ்டம் படத்தில் சிறப்பாக நடித்த அக்ஷ்ய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதுக்கு அக்ஷ்ய், தகுதியானவர் கிடையாது என்று விமர்சனங்கள் எழுந்தன. அக்ஷ்ய் கூட, நான் தகுதியற்றவன் என்றால் விருதை திருப்பி தந்துவிடுகிறேன் என்றார். இந்நிலையில் அக்ஷ்ய், தேசிய விருதுக்கு தகுதியானவர் தான் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சுனில் ஷெட்டி கூறியிருப்பதாவது... "இது முற்றிலும் தவறு, அக்ஷ்ய் குமார் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். எதற்காக ஒரு படத்தை மட்டும் பார்க்கிறீர்கள். அவருடைய சினிமா வாழ்க்கையை பாருங்கள், சுமார் 100 படங்களுக்கு மேல் அவர் நடித்திருக்கிறார். நிச்சயம் தேசிய விருதுக்கு அக்ஷ்ய் தகுதியானவர் தான்" என்று கூறியுள்ளார்.