போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் வினோத் கண்ணாவின் மறைவையொட்டில் பாகுபலி-2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் வினோத் கண்ணா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பாகுபலி-2 படம் நாளை உலகம் முழுக்கவும், சில வெளிநாடுகளில் இன்றும் ரிலீஸாக இருக்கிறது. ஹிந்தியில் வெளியாகும் பாகுபலி-2 படத்தை கரண் ஜோகர் வெளியிடுகிறார். இதையொட்டு இன்று சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வினோத் கண்ணாவின் மறைவால் அந்தக்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... ‛‛பாலிவுட்டின் சிறந்த நடிகரான வினோத் கண்ணாவின் மறைவு, அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருசிறந்த நடிகரை இழந்துவிட்டோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நடைபெற இருந்த பாகுபலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.