போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஹவுஸ்புல்-3 படத்திற்கு பிறகு பிரபுதேவாவின் லெப்டி, நிஷிகாந்த் காமத்தின் ஒரு படம்... என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் அபிஷேக். இந்நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த பாடலாசிரியர் சாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சனை நடிக்க கேட்டு வருகிறார். அதேப்போன்று இந்தப்படத்தில் இடம்பெறும் எழுத்தாளர் அமிர்தா பிரீத்தமின் ரோலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க கேட்டு வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அவர்கள் சம்மதம் சொன்னால் அடுத்தப்படியாக படப்பிடிப்பை விரைவாக தொடங்க எண்ணியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.