‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகள் கரீஷ்மா கபூரும் ஒருவர். இவர் பிரபல தொழிலதிபர் சந்தீப் தோஷ்னிவாலின் திருமணம் செய்ய இருப்பதாக சில மாதங்களுக்கு தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த திருமணத்திற்கு தடை ஏற்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை விலகியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்ற இந்தி நடிகை கரீஷ்மா கபூர், அண்மை காலமாக தமது நண்பரான தொழிலதிபர் சந்தீப் தோஷ்னிவாலுடன் பொது இடங்களில் ஒன்றாக தோன்றுவது அதிகரித்து வந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகளும் வெளியாகின . ஆனால், சந்தீப்பின் மனைவி மருத்துவர் ஆஷ்ரிதா கணவரை விட்டு பிரிந்து செல்ல தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில், ஆஷ்ரிதா விவகாரத்துக்கு தற்போது சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால, சந்தீப் தோஷ்னிவாலும், கரீஷ்மாவும் திருமணம் செய்வதில் இருந்த தடை முடிவு பெற்று இருக்கிறது . கரீஷ்மா கபூரின் முதல் கணவர் அண்மையில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.