போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் சர்கார்-3 எனும் படத்தை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த ராம் கோபால் வர்மாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் நீலேஷ் கிரிகர் தனது சம்பள பாக்கியை ராம் கோபால் வர்மா இன்னும் செட்டில் செய்யவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையின் போது ராம் கோபால் வர்மா ரூ6.2 லட்சம் நீதிமன்றத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதுவரை இப்படத்தின் சிறப்பு திரையிடலை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கிரிகர் அவரது வழக்கறிஞருக்கு சர்கார்-3 படத்தை திரையிட்டுக் காட்டவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் முழு திரைக்கதையின் நகலை கிரிகர் மற்றும் நீதிமன்றத்திடம் ராம் கோபால் வர்மா சமர்பித்தாக வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பினை பொருத்தே சர்கார்-3 படத்தின் ரிலீஸ் தேதி அமையும்.