‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். சிறைவாசத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கும் இவர், தற்போது, இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' என்ற படத்தில் நடிக்கிறார். அப்பா - மகள் இடையேயான பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சஞ்சய் தத்தின் மகளாக அதிதி ராவ் நடிக்கிறார். பூஷண் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஆக்ராவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சஞ்சய் தத்திடம் பலரும் அறிந்திராத ஒரு திறமை உள்ளது. அது என்னவென்றால் போட்டோ எடுப்பதில் கெட்டிக்காரரன். பூமி படத்தின் ஷூட்டிங் இடையே நடிகர் சஞ்சய் தத், போட்டோ எடுப்பதில் மிகவும் ஆர்வமாய் உள்ளார். தாஜ்மஹாலை வித்தியாசமான கோணங்களில் படம் பிடித்து தனது போட்டோகிராபி திறமையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பூமி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.