போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஆலியா பட், தற்போது கெளரி ஷிண்டே இயக்கத்தில் ‛டியர் ஜிந்தகி' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் ஷாரூக்கானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். தற்போது இந்தப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஆலியா.
இதனிடையே சமீபத்தில் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் வெளியாக வேண்டிய பல படங்கள் டிசம்பர், ஜனவரி என்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ரூபாய் நோட்டு பிரச்னை தன் படத்தை பாதிக்காது என்று கூறியுள்ளார் ஆலியா பட்.
இதுப்பற்றி ஆலியாபட் கூறியிருப்பதாவது... ‛‛இந்த பிரச்னை சீக்கிரம் தீரும் என்று நினைக்கிறேன், அதற்கு சில காலம் ஆகத்தான் செய்யும். இதனால் என் படம் பாதிக்கும் என்று சொல்ல முடியாது. ரசிகர்கள் ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்து படத்தை பார்க்கலாம்'' என்று கூறியுள்ளார்.