தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் ‛2.O'. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக பிரமாண்டமாய், சுமார் ரூ.350 கோடி செலவில் உரவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில், நேற்று நடந்தது. இதில் ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன், ஷங்கர், ஏஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, மதன்கார்கி, ரசூல் பூக்குட்டி, விஎப்எக்ஸ் ஸ்ரீனிவாச மோகன், ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்களுடன் அழையா விருந்தாளியாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானும் பங்கேற்றார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சல்மான், ‛‛இந்த விழாவிற்கு யாரும் என்னை அழைக்கவில்லை. ரஜினியை சந்திக்க வேண்டும் என்பற்தகாகவே யாரும் அழைக்காமல் வந்தேன். பர்ஸ்ட் லுக் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது, படம் பிரமாண்டமாய் இருக்கும் என நம்புகிறேன்'' என்று கூறியவர் நிகழ்ச்சியில் சல்மான் பேசும்போது ரஜினியை குரு குரு என்றே அழைத்தார்.