‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகைகள் விசாகாசிங்கும், ப்ரியா ஆனந்தும் இணைபிரியா தோழிகள். 2013ம் ஆண்டு பஃக்ரி என்ற இந்திப் படத்தில் இணைந்து நடித்தார்கள். மிருங்தீப் சிங் லங்கா இயக்கிய இந்தப் படத்தில் புல்கிட் சாம்ராட் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் விசாகா சிங் டீச்சராக நடித்திருந்தார். ப்ரியா ஆனந்த் அவர் தோழியாக நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகுதான் இருவரும் நிஜத்திலும் தோழி ஆனார்கள்.
இப்போது பஃக்ரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே மீண்டும் நடிக்கிறார்கள். விசாகா சிங்கும், ப்ரியா ஆனந்தும் மீண்டும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்தார். அவரது தோழியாக விசாகா சிங் நடித்தார். இப்படி நிஜத்திலும், நிழலிலும் தோழியாக வலம் வருகிறார்கள் விசாகா சிங்கும், ப்ரியா ஆனந்தும்.