ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
இந்தியில் இப்போது பயோபிக் படங்களின் சீசன். யாருடைய வரலாற்றை சினிமாவாக எடுத்தாலும் வெற்றி பெறுகிறது. அசாருதீன் பற்றிய படம் தவிர மற்ற அனைத்து படங்களும் வெற்றிதான். சமீபத்தில் கூட மகேந்திர சிங் தோனி, அன்னா ஹசாரேவின் வாழ்க்கை சினிமாவாக வெளிவந்தன. அடுத்து கேப்டன் லட்சுமி ஷெகாலின் வாழ்க்கையும் சினிமாவாகிறது.
இந்த நிலையில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. இந்தியாவின் பிரபலமான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர். இவர் கோர்ட்டுக்கு வந்தால் நீதிபதிகளே கொஞ்சம் ஜர்க் ஆவார்கள். நீதிபதியாகும் பல வாய்ப்புகளை மறுத்து தொடர்ந்து வழக்கறிஞராகவே இருப்பவர். தற்போது 93 வயதிலும் முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.
ராம்ஜெத் மலானியின் வாழ்க்கையை ரோணி ஸ்குரூவாலா, குணால் கேமு, மற்றும் நடிகை சோஹா அலிகான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இதுகுறித்து சோஹா அலிகான் கூறியிருப்பதாவது:
ராம்ஜெத்மலானியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது திறமையை யாரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பேன். அவரது வாழ்க்கையை எனது நண்பர் ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியபோது பல சுவாரஸ்யமான விஷயங்களை சொன்னார். ஒரு சினிமாவுக்குரிய சுவாரஸ்யம் ராம்ஜெத்மலானி வாழ்க்கையில் இருப்பதாக தோன்றியது. நண்பர்களுடன் இணைந்து அவரது வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க முடிவு செய்தோம். இதற்கு அவரது அனுமதியையும் பெற்று விட்டோம். நடிகர் நடிகைகள் தேர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றார் சோஹா அலிகான்.