போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டில் வளர்த்து வரும் இளம் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். சமீபத்தில் இயக்குநர் அலிஅபாஸ் இயக்கத்தில், வெளியாகி வசூலை குவித்த ‛சுல்தான்', படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்படத்தில் இருந்து அனுஷ்காவிற்கு நிறைய படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில், வெளிவரயிருக்கும் ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் உடன் முக்கியமான ரோலில் அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற அனுஷ்கா, தனக்கு பார்த்ததும் வரும் காதலில் நம்பிக்கையில்லை என்றார்.
இதைப்பற்றி அனுஷ்கா மேலும் கூறியதாவது...... "நான் மிகவும் யதார்த்தமான பொண்ணு. கண்டதும் வரும் காதலில் எனக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை. இவ்வகையான காதல் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. என்னை யாரும் காதலிக்கிறார்களா என்று தெரியாது. அவர்களாக வந்து என்னிடம் கூறும் வரை அவர்களை நான் என் நண்பர்களாக தான் பார்ப்பேன் " என்றார்.