‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் ஆகியோர் நடிப்பில் பிரச்னைகள் பல தாண்டி ஒருவழியாக நாளை(அக்.,28-ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இப்படத்திற்கு பல பிரச்னைகள் எழுந்தது ஒருபுறம் என்றால் மற்றொரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது ரன்பீர்-ஐஸ்வர்யா இடையேயான நெருக்கமான காட்சிகள். இதுப்பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த ரன்பீர், இப்போது முதன்முறையாக வாய் திறந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க நான் தயங்கினேன், கையெல்லாம் நடுங்கியது. அவரது கன்னத்தை தொடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அவர் என்னை திட்டினார், என்னைப்பார், என்னாச்சு உனக்கு, ஒழுங்காக நடி, நாம் எல்லாம் நடிகர்கள் என்று ஊக்கம் கொடுத்தார். பின்னர் அவருடன் தைரியமாக நெருக்கமாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.