தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ், ஹந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களில் இலியானாவும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் இலியானா அக்ஷ்ய குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு இலியானா எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இலியானா, பட வாய்பிற்காக யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் என்றார்.
இதைப்பற்றி இலியானா மேலும் கூறியதாவது...."பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தி கொண்டால் அதை நம்மை உயர்த்தும், இல்லையென்றால் மொத்தமாக பாலிவுட் சினிமாவை விட்டே துரத்தி விடும். பட வாய்ப்பே இல்லை என்றாலும் கூட யாரிடமும் போய் வாய்ப்பிற்காக கையேந்தி (பிச்சை) நிற்க மாட்டேன் " என்றார்.
இலியானா, தற்போது ‛பாத்சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.