‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் அவர்கள் நடித்துள்ள படத்தை திரையிட விடமாட்டோம் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ‛ஏ தில் ஹே முஷ்கில்' ரிலீஸாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதைப்பற்றி நடிகை ஆலியாபட்டிடம் பத்திரிக்கையாளர் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து ஆலியா கூறியதாவது...."‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் பார்த்தேன், படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது. படத்திற்கு தடை விதித்தது நியாயமற்றது தான். அதேசமயம் நான் இந்தியா மீது மிகவும் பற்று வைத்துள்ளேன். என் திரைதுறை மீது மரியாதை வைத்துள்ளேன். ஓராண்டாக இந்த பட வேலைகள் நடந்து வந்தது. தற்போது என்ன மாதிரியான நிலை இருக்கிறது என்று தெரியும், விரைவில் இந்தநிலை மாறும் என்று எண்ணுகிறேன் " என்றார்.