போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டில் ஒரேகாலக்கட்டத்து நடிகர்கள் சல்மான்கானும், அஜய் தேவ்கனும். இருவரும் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர். அதேசமயம் இருவருக்குள்ளும் அவ்வளவாக புரிதல் கிடையாது. இதனிடையே, தற்போது அஜய், சிவாய் படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளுடன் படத்தின் புரொமோஷன் வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜய்யிடம், சல்மான் உடனான நட்பு பற்றி கேட்டபோது அவர் பதிலளித்தாவது...
‛‛பொதுவாக நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட மாட்டேன். நானும் சல்மானும் ஒரேக்காலக்கட்டத்தில் தான் இந்த துறைக்கு வந்தோம். இப்போது வரை சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நாங்கள் இந்த துறையில் நீடிக்கிறோம். என் சமகாலத்து நடிகர்கள் எல்லாம் இன்றைக்கு பார்ட்டி, நண்பர்களுடன் அரட்டை போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவது கிடையாது. நான் என் நண்பர்களின் வட்டத்திற்குள் உள்ளேன். அவர் அவருடைய நண்பர் வட்டத்தில் உள்ளார், இருவருக்கும் அதுவே போதும்'' என்று கூறியுள்ளார்.
சிவாய் படம் வருகிற அக்.,28-ம் தேதி தீபாவளி விருந்து படைக்க வருகிறது.