‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் புகுந்து காஷ்மீர் மாநிலம் யூரியில் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 19பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், நேற்று அதிகாலை பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளை சர்ஜிக்கல் ஆபரேஷன் எனும் அதிரடி தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளை துவம்சம் செய்ததோடு, பாகிஸ்தானையும் அலற செய்தது. இதற்காக இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்று ஜான் ஆபிரஹாம், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள போர்ஸ்-2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது ஜானிடம் இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜான்... ‛‛நமது ராணுவத்தை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த தாக்குதலை நாம் முன்னரே நடத்தியிருக்க வேண்டும். பயங்கரவாதிகளை வேரறுக்க இதுவே உச்சமான நேரம். நம் நாடு சகிப்புதன்மை நிறைந்த நாடு, இதனால் பொறுமையாக இருந்தது. தற்போது பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா என்ன செய்ய முடியும் என்று இன்று நமது நிலைப்பாட்டை காண்பித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.