‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஹிந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோகளில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி சாதாரண வசூலை தந்தப்படம் ‛டிஷூம் '. இப்படத்தில் ஜான் ஆபிரகாம் உடன் வருண் தவனும் நடித்து உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டில் ஜானிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் ஏன் சுயசரிதை படங்களில் நடிப்பதே இல்லை என்று கேட்டனர்.
இதற்கு ஜான் ஆபிரகாம் கூறியதாவது..." நான் அனைத்து வகையான கதைகளிலும் நடித்து இருக்கிறேன். எனக்கு ஆக்சன் கதை தான் பிடிக்கும். வாழ்க்கை வரலாறு சார்ந்தப்படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. ரசிகர்களுக்கு நான் ஆக்சன் ஹீரோவாக இருப்பது தான் பிடிக்கும்" என்றார்.
ஜான் ஆபிரகாம் தற்போது நடித்து வெளிவரயிருக்கும் படம் போர்ஸ்-2 . இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.