‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் அக்ஷ்ய் குமார் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ‛ஸ்பெஷல்-26', ‛பேபி' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர், அந்த படங்களும் வெற்றி பெற்றன. தொடர்ந்து படங்களில் இணைய உள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அக்ஷ்ய் உடன் இணைந்து பணியாற்ற என்ன காரணம் என்று நீரஜ் பாண்டேவுடன் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பெரிய ஸ்டார் நடிகர் என்பதால் மட்டும் அக்ஷ்ய் குமாருடன் தொடர்ந்து பணியாற்றவில்லை. எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் அதீத நம்பிக்கை இருக்கிறது. நான் எப்பவும் அவரிடத்தில் ஒரு படத்தில் நடிக்க கேட்கும்போதெல்லாம் அந்த ரோலுக்கு அவர் செட் ஆவார் என்பதால் தான் தொடர்ந்து அவருடன் பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.