ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அலி அபாஸ் ஜாபரும், சல்மான்கானும் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அவர்கள் இணையும் படம் ‛ஏக்தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும், படத்திற்கு டைகர் ஜிந்த ஹே என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுப்பற்றி இயக்குநர் அலி அபாஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛இன்னும் உறுதியாகவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உறுதியானதும் அறிவிப்பு வெளியாகும். தற்போது நான், சுல்தான் படத்தின் கொண்டாட்டத்தை விடுமுறையாக கழித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
‛ஏக்தா டைகர்' படம் 2012-ம் ஆண்டு சல்மான், கத்ரீனா நடிப்பில் கபீர்கான் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.