‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிடித்து வைத்து, விசாரிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தனது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையில், " இந்த சம்பவத்திற்கு பிறகு ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து திரும்பி வந்திருந்தால், அது அமெரிக்காவிற்கு முகத்தில் அரைந்தது போல் இருந்திருக்கும். அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கானுக்கு இது போன்று நடப்பது வாடிக்கையாகி விட்டது. அவமானப்பட வேண்டும் என்பதற்காகவே ஷாருக்கான் தொடர்ந்து அமெரிக்கா செல்கிறார். இது போன்று அவமதிப்பதால் இனி நான் உங்கள் நாட்டிற்கு வர மாட்டேன் என ஷாருக்கான் கூறி விட்டு, திரும்பி வந்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.