ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சராசரி மக்களுக்கு சொந்த வீடு ஒரு வாழ்நாள் கனவு. வசதி படைத்தவர்களுக்கு போர்ட் கிளப் ஏரியாவில் பங்களா வாங்குவது கனவு. இன்னும் வசதியானவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பார்ம் ஹவுஸ் கட்டுவது கனவு. அதுபோல பிரபல நடிகர்களுக்கு துபாய் கடலுக்கு நடுவில் பங்களா வாங்குவது கனவு.
துபாயில் கடலை மேடாக்கி ஈச்ச மரத்தின் வடிவில் ஒரு நகரை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு வீடு வாங்கி குடியிருந்தால் பூமியிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம் என்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி, ஸ்ரீதேவி, ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருக்கு அங்கு எற்கெனவே பங்களா உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராயும் அங்கு ஒரு பங்களாவை வாங்கி உள்ளார்.
பிரமாண்ட நீச்சல்குளம், சுற்றிலும் ஈச்ச மரம். மினி தியேட்டர், பெரிய உடற்பயிற்சிக்கூடம், தியானகூடம், 9 படுக்கை அறைகள், ஒரு மீட்டிங்ஹால், ஒரு வரவேற்பு ஹால் கணினிமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வசதி இத்தனை வசதிகளும் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 54 கோடி ரூபாய். இது ஐஸ்வர்யாராயின் ஒரு வருட வருமானம். ஏற்கெனவே கணவருடன் தனிக்குடித்தனத்தை ஐஸ்வர்யா வற்புறுத்தி வரும் நிலையில் அவரின் இந்த தனி வீடு குடும்பத்துக்குள் லேசான புகைச்சலையும் கிளப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள்.