போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஷாரூக்கான் நடிப்பில் ‛ரயீஸ்' படமும், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ‛காபில்' படமும் ஒரே நாளில் அதாவது 2017, ஜன.,26ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இரண்டு பெரிய படங்கள் ஒரேநாளில் ரிலீஸானால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் என்று இரண்டு படக்குழுவும் நினைக்கிறது. இதனால் மோதலை தவிர்க்க இரண்ட படக்குழுவினரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பெரிய படங்கள் ஏன் ஒரே நாளில் ரிலீஸாக கூடாது என்று ஷாரூக்கான் பதிலளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛பொதுவாக பெரிய படம் என்றால் குறைந்தது 3500 முதல் 4000 தியேட்டர்களில் ரிலீஸாகும். அப்படிபார்க்கையில் ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸாகும்போது 7000 முதல் 8000 தியேட்டர்கள் வரை தேவைப்படும். ஆனால் அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்று சொல்ல முடியாது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.