போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இன்றைக்கு சமூக வலைதளங்கள் தான் அனைவரையும் ஆட்டுவிக்கிறது என்ற நிலைமைக்கு இந்த உலகம் வந்துவிட்டது. குறிப்பாக சினிமா பிரபலங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களை, ரசிகர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சில போலியான முகவரிகளும் உண்டு.
இதனிடையே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப், தன்னை டுவிட்டரில் இணைத்து கொள்ள இருக்கிறார். வருகிற ஜூலை 16ம் தேதி கத்ரீனாவிற்கு பிறந்தநாள், அன்றைய தினமே அவர் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்றவற்றில் இணைய உள்ளார். இனி தன் படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் இந்த சமூக வலைதளங்களில் பகிர உள்ளார். மேலும் அவ்வப்போது தனது ரசிகர்களுடனும் கலந்துரையாட இருக்கிறார். முதற்கட்டமாக கத்ரீனா, தான் நடித்து வரும் ‛‛பார் பார் தேகோ'' படத்தை புரொமோஷன் செய்ய இருக்கிறார். இப்படம் செப்.,9ம் தேதி வெளியாக இருக்கிறது.