‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத் மீண்டும் சினிமாவில் பரபரப்பாயிருக்கிறார். சஞ்சய் தத்தின் வாழ்கையை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி படமாக்க இருக்கிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஹரோயின் இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில் கத்ரீனா இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் தத், மனைவி மான்யதா தத் வேடத்தில் கத்ரீனா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சஞ்சய் தத், படக்குழுவிடம் தெரிவித்தாகவும் அதன்படி படக்குழு கத்ரீனாவிடம் பேசியிருப்பதாகவும், கால்சீட் உள்ளிட்ட விஷயங்களால் அவர் இன்னும் முடிவு சொல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கத்ரீனா நடிக்கிறாரா, இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.
சஞ்சய் தத்தின் வாழ்கைப் பற்றிய இப்படம் 2017ஆம் ஆண்டு கிறிதுஸ்மஸில் வெளியாக உள்ளது.