‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாணி,சமந்தா,சுதீப் நடிப்பில் உருவான நான் ஈ திரைப்படம் தெலுங்கு,தமிழ் என பல மொழிகளில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சுதீப்பின் வில்லத்தனம் என பல வகையில் பாராட்டுக்களையும் பெற்றது. நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக கதையாசிரியர் விஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலியின் தந்தையான விஜேந்திர பிரசாத் ராஜமௌலியின் வெற்றிப் படங்களான மகதீரா, பாகுபலி போன்ற படங்களுக்கும் ரவுடி ராத்தூர், பஜ்ரங்கி பைஜ்ஜான் போன்ற ஹிந்தி படங்களிலும் கதையாசிரியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ராஜமௌலியின் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக உள்ள ராஜமௌலி அடுத்ததாக நான் ஈ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.