‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். இவர் தற்போது ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர 'ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் உடன் ரன்பீர் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் நடிப்பது தான் ரன்பீரின் கனவாம். அது இப்போது நிறைவேறியுள்ளது என்கிறார் ரன்பீர்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... என் அப்பாவின் ஆ ஆப் லாட் சலேன் படத்தில் உதவியாளராக இருந்தேன். அப்போது தான் ஐஸ்வர்யா ராயை பார்த்தேன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் என் கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவருடன் நடிப்பது எனக்கு பெருமை. படப்பிடிப்பில் ஒரு நண்பர் போல என்னுடன் பழகினார் என்று ரன்பீர் கூறியுள்ளார்.