‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
2010ம் ஆண்டு பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளியான படம் 'ராஜ்நீதி'. அஜய் தேவ்கன், நாணா பட்டேக்கர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலரது நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பிரகாஷ்ஜா. இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ''ராஜ்நீதி'' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன், விரைவில் இது நடக்கும். 2010ம் ஆண்டு முதல்பாகம் வந்தது. தற்போதைய சூழலில் நிறைய அரசியல் மாற்றங்கள் வந்துள்ளன. கதை முழு வடிவம் பெற்றவுடன் இதன் வேலைகள் தொடங்கும் என்று கூறியுள்ளார்.