போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்க நடிகர் ரன்பீர்கான் முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர்பூர். இந்தாண்டு இவரது நடிப்பில் மூன்று படங்கள் தயாராகியுள்ளது. இதில் 'ராய்', 'பாம்பே வெல்வெட்' படங்கள் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது, 'தமாஷா' படம் நாளை (நவ.,27ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... இனி, ஒரேசமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு படத்தின் கேரக்டரில் இருந்து மற்றொரு படத்தின் கேரக்டருக்கு உடனடியாக மாறுவது சற்று கடினமாக உள்ளது. ஆனால் நான் மாறித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் நான் ஒரு நடிகன், அது தான் எனது அடையாளம் என்று கூறியுள்ளார்.
'தமாஷா' படத்தை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். ரன்பீருடன் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படம் நாளை(நவ.27) ரிலீஸாகிறது.