போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
புராண காலத்தில் பலம் வாய்ந்த பெண்ணாக விளங்கிய திரவுபதி கேரக்டரில் நடிக்க தனக்கு விருப்பம் என்று பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். கவர்ச்சிக்காக மட்டுமே, இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த நடிகை மல்லிகா ஷெராவத், சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மூலம், தனக்கு குணசித்திர வேடமும் பொருந்தும் என்பதை நிரூபித்தார். இந்நிலையில், யாரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க தங்களுக்கு விருப்பம் என்று கேட்டதற்கு, புராண காலத்தில் பலம் வாய்ந்த பெண்ணாக விளங்கியவர் திரவுபதி. அத்தகைய கேரக்டர்களில் தனக்கு நடிக்க விருப்பம். தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும், ஆனால், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளதால், கவனமாக கதை கேட்டு வருவதாக மல்லிகா ஷெராவத் கூறினார்.