போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சில் பதவியிலிருந்து விலகுவதாக, பிரபல நடிகை பல்லவி ஜோஷி கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக சவுகான் உள்ளார். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் தலைவர் சவுகானை, அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அப்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை பல்லவி ஜோஷி கூறியதாவது, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சில் பதவியிலிருந்து தானும் விலக உள்ளேன். இதற்கான கடிதத்தை, மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களே, பயிற்சி நிறுவனத்தில் நிறைந்துள்ளனர். இவர்களது மத்தியில், நமக்கும் நேர்மறை விஷயங்களே எழ வாய்ப்பில்லை. இதன்காரணமாக, மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். கவுன்சில் உறுப்பினர் பதவியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக பல்லவி ஜோஷி கூறியுள்ளார்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலில், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ஒளிப்பதிவாளர் ஷைலேஷ் குப்தா, நடிகை வித்யாபாலன், நடிகர்கள் ராகுல் சோலாபுர்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.