ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட் நடிகை வித்யாபாலன் பெரும்பாலும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். அவர் நடிக்கும் கேரக்டர்கள் வேண்டுமானால் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர அவர் ரொம்பவே மென்மையான மனம் கொண்டவர்.. அவரை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் படப்பிடிப்பின்போது கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மோஹித் சூரி என்பவர் இயக்கும் 'ஹமாரி அதூரி கஹானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ராஜ்குமார் ராவ் மற்றும் இம்ரான் ஹாஸ்மி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். தனது சைக்கோ கணவனிடம் மிகுந்த டார்ச்சரை அனுபவிக்கும் ஒரு பெண்ணை பற்றிய படம் தான் இது. இதில் வித்யாபாலனின் கொடுமைக்கார கணவராக நடிக்கும் ராஜ்குமார் ராவ், படப்பிடிப்பின்போது வித்யாபாலனை கன்னத்தில் அறைய வேண்டிய காட்சியில் நிஜமாகவே அறைந்துவிட்டார்..
அதுவும் ஒன்றல்ல.. மூன்று முறை அறைந்துள்ளார். அவரின் இந்த செயலால் படக்குழுவினர் ஸ்தம்பித்து நிற்க, பின்னர்தான் தெரிந்தது வித்யாபாலன், ராஜ்குமார் இருவரும் காட்சி இயல்பாக வரவேண்டும் என்பதற்காக முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு நடித்தார்கள் என்று..
ரியாலிட்டிக்காக என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..!