‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கோவாவில் தான் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி, தனக்குள் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளதால், அது குறித்து புத்தகம் எழுத உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதுகுறித்து, டுவிட்டரில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளதாவது, திருமணம் என்பது, இந்திய திருநாட்டின் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. கோவாவில் நடைபெற்ற வங்காள மக்களின் திருமணத்தில் கலந்துகொண்டேன். அதில் பல வித்தியாசமான சடங்குகளை பார்ததேன். அதுகுறித்து, விரைவில் புத்தகம் எழுத உள்ளேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் பிகு மற்றும் வாஜிர் படம் விரைவில் வெளியாக உள்ளது.