‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார், பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 104 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை ஜனவரி 26ம் தேதி அறிவித்தது மத்திய அரசு. இதற்கான விழா, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது. பாலிவுட்டின் மெகா ஸ்டார்களான அமிதாப் பச்சன் மற்றும் திலீப் குமார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி.
இதேப்போல் பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் ஜானு பருவா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.