நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
தான் விருதுகளை குறிவைத்து எப்போதும் நடிப்பதில்லை என்றும், விருது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுபவளும் தான் அல்ல என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். தியா மிர்சா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் பாபி ஜஸோஸ். இந்த படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தபோதிலும், பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில், எந்தவொரு விருது பரிந்துரையிலும், பாபி ஜஸோஸ் படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வித்யா பாலன் கூறியுள்ளதாவது, விருது வழங்குதல் என்பது, அந்தந்த நடுவர்களின் தீர்ப்பை பொறுத்தது. அவர்களின் முடிவிற்கு எப்போதும் தலைவணங்குகிறேன். பாபி ஜஸோஸ் படத்திற்கு விருது கிடைக்காதது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்குமே தவிர, தன்னை அது பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.