‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அக்ஷய் குமார், தன்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் என்று அழைப்பதை, என் மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. என்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைத்தால் போதும். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி எனக்கு வேண்டாம். படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே தான் நடித்து வருகிறேன். ஆண்டிற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும், ஆனால், அத்தகைய படங்கள், எனது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக மற்றும் நல்ல கருத்துகளை சொல்பவையாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.