‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜஜ்பா பட சூட்டிங்கில், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவிற்காக, சிறப்பு கேரவன் வரவழைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன், தற்போது ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ஜஜ்பா படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா, இதுகுறித்து கூறியதாவது, எனக்கும் 2 குழந்தைகள் உள்ளன. சிறு குழந்தைகளை பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நேரில் அனுபவித்தவன். ஐஸ்வர்யா நடிப்பில் படம் இயக்க வேண்டும் என்ற கனவு, இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நடிப்பதன் மூலம், ஐஸ்வர்யா ராய்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக, அவரது குழந்தை ஆரத்யாவிற்காக, சிறப்பு கேரவன் வரவழைத்துள்ளேன். அந்த வேனில், எனது குழந்தைகளுடன், ஆரத்யாவும் இணைந்து விளையாடி வருவதாக சஞ்சய் குப்தா கூறினார்.