ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் இந்தி சினிமாவின் மெகா ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் மற்றும் திலீப்குமாருக்கு இருவரும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இயக்குநர் ஜானு பருவாவும் பத்ம பூஷண்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை தவிர,கலைத்துறையில், கன்னியாகுமரி அவசரலா, நரேஷ் பேடி, இயக்குநர்சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், ரவீந்தர ஜெயின், பரசூன்ஜோஷி, பிரபுலா கர், தாரக்மேதா, நெயில் ஹெர்பர்ட், ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள, 104 பேருக்கும், வரும் மார்ச் அல்லது ஏப்ரலில், ஜனாதிபதி விருதுகளை வழங்குவார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.