‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஷமிதாப் படத்திற்காக, இளையராஜா இசையில் பாடியது, வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
ஷமிதாப் படத்தில் பாடியது தொடர்பாக, நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் பாத்ரூம் சிங்கர் தான். "பொதுவாக பாத்ரூமில் ஷவரைத் திறந்ததும் எனக்குள் இருக்கும் பாடகன் விழித்துக் கொள்வான். முறையாக இசை பயின்றவன் இல்லை. ஆனால் இளையராஜா போன்ற இசை மேதையின் இசையில் பாடியது உண்மையில் பெரிய ஆசீர்வாதம். அதனால் முதலில் பாடலை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என் பாத்ரூமில்தான் பிராக்டீஸ் செய்தேன். அதன் பிறகுதான் ரெக்கார்டிங் செய்யப்பட்டது," என்று கூறினார்.
ஷமிதாப் படத்தி்ற்காக, அமிதாப் பச்சன் பாடிய பிட்லி சே..பாடல், சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.